கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் மேலும் 73 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இருவர் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 71 பேருக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரையில் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5427 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் 2219 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை