வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கிற்கு சிகிச்சைக்காக சென்ற பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற வார்ட் மூடப்பட்டு பொலன்னறுவ மருத்துவமனை செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வயிற்றுப் போக்கிற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த பொலன்னறுவை, திம்புலாகல, போகஸ்வெவ கிராமத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கு கடந்த நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து பொலன்னறுவ வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த அடிப்பயைடில் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை