கொரோனா 3வது அலை தாக்கம் இலங்கையை பாதித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்க உள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது நாளை (18) மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை