மினுவாங்கொட கொத்தணி கொரோனா பரவல் இலங்கையில் கொரோனா 3வது அலையாக உருவாகி பெருஞ்சவாலாக மாறிரும் நிலையில் இன்று மேலும் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சற்று முன்னதாக மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று ஏற்கனவே மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன்மூலம் இன்று இதுவரை 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மினுவாங்கொட கொத்தணி கொரோனா பரவல் காரணமாக இதுவரை தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை