கம்போடியாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,608 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் முகாமைத்துவக் குழுவின் செய்தித் தொடர்பாளர் சீக் விச்செட் தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து நாட்டின் 25 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 245,428 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மாலை நிலவரப்படி, வெள்ளத்தில் சிக்கி இந்த மாதத்தில் இதுவரை 20 போ் உயிரிழந்துள்ளதாக விச்செட் கூறினார்.
பர்சாட், பட்டம்பாங், பான்டே மீன்ச்சே, கண்டல் மற்றும் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான புனோம் பென் ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் 59,268 வீடுகள் மற்றும் 242,372 ஹெக்டேர் வயல் நிலங்கள் மற்றும் பிற பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே பொதுவாக கம்போடியாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழமை. கடந்த ஆண்டு, மீகாங் நதி பெருக்கெடுத்து எற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததுடன், 131 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.