மன்னார் மறைமாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஜோசப்வாஸ்நகர் பங்கில் புனித மரிய கொறற்றி சபை வெள்ளிக்கிழமை (16) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
புனித மரிய கொறற்றியின் 130 வது பிறந்த தினமாகிய அன்று(16.) பங்கில் உள்ள 25 மாணவிகள் இச்சபையில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.
-இந்த நிலையிலே ஜோசப்வாஸ்நகர் பங்கில் புனித மரிய கொறற்றி சபை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பங்குத்தந்தை அருட்பணி. அலெக்ஸாண்டர் ஆரோக்கியம் அவர்களின் ஆலோசனைகளுக்கும், வழிகாட்டலுக்கும் அமைவாக நீண்ட காலத்திற்கு பின்னர் பங்கில் உள்ள மாணவிகளுக்கு ஒரு பணிக்களமாக இச்சபை ஆரம்பிக்கப்பட்டு சபை நிறுவும் திருச்சடங்கும், திருப்பலியும் பங்குத்தந்தையால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்