Friday 29th of March 2024 01:50:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!


மினுவாங்கொட கொத்தணி கொரோனா பரவலுடன் தொடர்புபட்டு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தை அண்மித்ததாக காணப்படும் ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவத்தார்.

நேற்றைய தினம் அங்கு மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இதுவரை தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புபட்ட ஏனைய தொழிலாளிகளுக்கு பிசிஆர் பரிசோதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE