மினுவாங்கொட கொத்தணி கொரோனா பரவல் ஏற்பட்டு 2 வாரங்கள் கடந்துள்ள போதிலும் தொற்று பரவல் தணியாது தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கொத்தணியில் சற்று முன்னதாக மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட கொத்தணி கொரோன தொற்றின் முதல் தொற்றாளர் இனம் காணப்பட்டு இரண்டு கிழமைகள் கடந்துள்ள போதிலும் குறித்த முதலாது தொற்றாளருக்கு தொற்று ஏற்பட்ட வழித்தடத்தை இன்றும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை