Friday 29th of March 2024 08:31:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரிசாட் பதியுதீன் கைது!

ரிசாட் பதியுதீன் கைது!


முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, இடம்பெயர்ந்த வாக்காளர்களை அரச பேருந்துகளில் ஏற்றிச் சென்றதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 3 பேர் மீது முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் ஆறு நாட்களின் பின்னர் இன்று தெஹிவளை பகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE