Tuesday 16th of April 2024 06:23:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா: காவற்துறை அதிகாரிகள் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா: காவற்துறை அதிகாரிகள் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!


கொரோனா தொற்று உறுதியான இருவரால் காவற்துறை அதிகாரிகள் 16 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து குறித்த பெலிஸ் அதிகாரியும் அவருடன் பணிபுரிந்த 16 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தநிலையில், ஆமர் வீதி பொலிஸ் நிலையம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE