கொரோனா தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள மத்துகம பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றிள் சேவையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட மத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளருக்கே கொவிட்-19 தொற்றுதியானது.
கடந்த தினம் மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை