நடைபெற்று வரும் க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்கள் எழுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா தொற்று பரவலுடன் தொடர்புபட்டு பெரும் கொத்தணி கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுவரும் கம்பஹா மாவட்டத்திலேயே, இந்த முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 7 மாணவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானது.
இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த மாணவர்கள் பரீட்சையை தொடர சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை