கொழும்பில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் ஊழியிர்கள் இருவருக்கும் அவர்களது தாயர் இருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றிவரும் ஊழியர் இருவருக்கும் மற்றும் அவர்களது தாயார் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக கஹத்துடுவ சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த இரு வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைய நாட்களில் நெருங்கிப் பழகியவர்கள் குறித்த விபரங்கள் அறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு