யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பயணங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் போன்றவை தொடர்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோவினால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்