Tuesday 16th of April 2024 06:16:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை கொரோனாத் தொற்றாளர் புத்தளத்துக்கு அனுப்பபடுகிறார்!

பருத்தித்துறை கொரோனாத் தொற்றாளர் புத்தளத்துக்கு அனுப்பபடுகிறார்!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அரச பேருந்து நடத்துனர் சிகிச்சைக்காக புத்தளம் மாவட்டம் இரணவில கொரோனா தடுப்பு விசேட வைத்தியசாலைக்கு இன்று மாலை அனுப்பப்படுகிறார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்ச்சி கிழக்கு மருதங்கேணியில் கொரோனா விசேட வைத்தியசாலை இன்று காலை திறக்கப்பட்டபோதிலும் அதன் அனைத்து வேலைகளும் நிறைவடையாமை காரணமாகவே அவர் இன்று புத்தளம் இரணவில வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கொரேனாத் தொற்றுக்கு உள்ளானவர்கள் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மருதங்கேணி விசேட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE