பொதுஜன முன்னணி அரசு கொண்டுவந்திருக்கும் அரசமைப்பின் 20ம் திருத்தத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்தை முற்றிலுமாக இல்லாதொழித்து சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் வகையில் 20ம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பினை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்துவரும் இரு தினங்களில் 20ம் திருத்தம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த 20ம் திருத்தச் சட்டவரைவில் மேலும் 3 திருத்தங்களை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.