இலங்கையின் புதிய கொரோனா வைரஸ் கொத்தணி தொற்று மையமான மினுவங்கெடையில் இதுவரை மொத்தம் 84,598 பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணி தெரிவித்துள்ளது.
இவற்றில் இதுவரை 84,239 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
359 பி.சி.ஆர். சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் எனவும் தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை