கொரோனா தொற்று நோய்க்கு சாத்தியமான தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டால் அதனை வழங்க ஏதுவாக 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகெங்கும் ஒரு பில்லியன் சிரிஞ்சுகளை இருப்பு வைக்க ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 520 மில்லியன் சிரிஞ்சுகளை உலகெங்கும் சேமிப்பகங்களில் இருப்பு வைக்க முடியும் என ஐ.நா. சிறுவா் பாதுகாப்பு நிதியம் (UNICEF) கணிப்பிட்டுள்ளது. 2021 இறுதிக்குள் இவை 1 பில்லியன் இலக்கை அடையும்.
உலகெங்கும் தற்போது 42 கொரோனா தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன. அதில் 10 மருந்துகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலகெங்கும் இதுவரை 40 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 1.1 மில்லியனுக்கும் அதிகமானவா்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.