புதியதாக வர்த்தமானியில் பிரகடனம் கோவிட்-19 கட்டப்பாட்டு விதிமுறைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோரிடையே இன்று பாராளுமன்றில் கார-சார விவாதங்கள் இடம்பெற்றன.
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகள் பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஏன் பின்பற்றப்படவில்லை? என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பயதை அடுத்து இருவருக்கும் இடையே இது தொடர்பில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதற்குப் பதிலளித்த பவித்ரா வன்னியராச்சி, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கட்டாயம் பேணுதல் போன்ற நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டிய பொது இடமாகப் பாராளுமன்றம் வகைப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.