Saturday 20th of April 2024 06:50:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
பறிக்கப்பட்ட உந்துருளியை கைக்குண்டை காண்பித்து மீட்க முயற்சி: கட்டைக்காடு பகுதியில் மூவர் கைது!

பறிக்கப்பட்ட உந்துருளியை கைக்குண்டை காண்பித்து மீட்க முயற்சி: கட்டைக்காடு பகுதியில் மூவர் கைது!


முரண்பாட்டில் பறித்துச் செல்லப்பட்ட உந்துருளி ஒன்றை கைக்குண்டை காண்பித்து மீட்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கட்டைக்காடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று (ஒக்-20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (ஒக்-18) இரு தரப்பிற்கு இடையே ஏற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த முரண்பாடு வலுத்து கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது உந்துருளியை ஒரு சாரார் அபகரித்துள்ளனர்.

இதன்போது உந்துருளியை பறிகொடுத்தவர் நேற்றைய தினம் (ஒக்-19) அன்றையதினம் ஒர் கைக்குண்டினை காட்டி தனது உந்துருளியைத் தரும்படி மிரட்டியுள்ளார்.

கைக்குண்டை காண்பித்து மிரட்டிய சம்பவம் தொடர்பான தகவல் மறுதரப்பால் கிளிநொச்சி பளை பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சம்பந்தப்பட்ட கைக்குண்டை காண்பித்து மிரட்டிய நபரை கைது செய்ததுடன் அச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்துள்ள பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE