கொழும்பிலுள்ள உலக வா்த்தக மையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக வர்த்தக மையத்தில் வெஸ்ட் டவர், 32 வது மாடியில் உள்ள ஒரு பிரிவில் பணியாற்றியவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையத்தின் வாடிக்கையாளர் தொடர்பு முகாமையாளர் சுரானி கோவிபல்கொட வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர் கடைசியாக ஒக்டோபர் -08 ஆம் திகதி உலக வர்த்தக மையக் கட்டிடத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் பணியாளர் பணிபுரிந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்புத் தடமறிதல் நிறைவடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பு கொண்ட பணியாளர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக வர்த்தக மைய கட்டடத் தொகுதி முழுமையான தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனவும் உலக வர்த்தக மையத்தில் வாடிக்கையாளர் தொடர்பு முகாமையாளர் சுரானி கோவிபல்கொட வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.