முத்தையா முரளிதரன் வாழ்ககை வரலாற்று படமான 800 திரைப்படத்திற்கான எதிரப்பின் தொடர்ச்சியாக நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளங்களினூடாக பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க முற்ப்ட்ட நடிகர் விஜய்சேதுபதிக்கு தமிழ் உணர்வாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளியாகியிருந்தது.
இதையடுத்து குறித்த திரைப்படத்தில் இருந்து விலகுமாறு முத்தையா முரளிதரன் வேண்டுகோ விஜய்சேதுபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். நன்றி வணக்கம் என்று குறிப்பிட்டு அக்கடிதத்தை தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி வெளியிட்டதன் மூல்ம அவர் 800 திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறு சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு, சென்னை