கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் விமானப் போக்குவரத்து உட்பட போக்குவரத்துத் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கனேடிய அரசாங்கம் நன்கு அறிந்துள்ளதுடன், இத்துறையினருக்கு சாத்தியமான உதவிகளைச் செய்வது குறித்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கனேடிய நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கனடாவின் முக்கிய விமான நிறுவனங்களின் தலைவர்களுடன் கடந்த வாரம் தான் பேசியுள்ளதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த ஃப்ரீலாண்ட் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
விமானப் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கனேடிய விமான சேவை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்தோர் கனடா மத்திய அரசின் உதவி கோரி பல முறை விண்ணப்பம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.