Friday 19th of April 2024 09:29:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
“20” தொடர்பிலான அமர்வு தொடங்கியது! கொரோனா விவகாரத்தால் சபையில் குழப்பம்!

“20” தொடர்பிலான அமர்வு தொடங்கியது! கொரோனா விவகாரத்தால் சபையில் குழப்பம்!


இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சற்று முன்னர் நாடாளுமன்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் தொடங்கியுள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்ற சஜித் பிரேம தாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனம் பேரணியாக நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.

வாகனத்தில் 20 இற்கு எதிரான கொடிகள் பறக்கப்படவிடப்பட்டு, கைகளிலும் முகக் கவசத்திலும் 20 இற்கு எதிரான குறியீடுகள் பொறிக்கப்பட்ட பட்டிகள் அணியப்பட்டிருந்தன.

இதனை அடுத்து சபை அமர்வுகள் தொடங்கியிருந்தபோதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட்டவர்கள் கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் வலியுறுத்தி தெரிவித்துவருவதால் குறித்த விடயத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பதில் வழங்க முற்பட்டதை அடுத்து சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE