Thursday 28th of March 2024 12:50:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்திய இராணுவத்தினரின் யாழ்.போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவேந்தல்!

இந்திய இராணுவத்தினரின் யாழ்.போதனா வைத்தியசாலைப் படுகொலை நினைவேந்தல்!


இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவேந்தல் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு இதே நாள் இந்திய இராணுவத்தினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியில் இருந்த வைத்தியர்களும் மருத்துவப் பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள படுகொலையான மருத்துவப்பணியாளர்கள் நினைவான நினைவுத்திருவுருப்படத்தின் முன்பாக நினைவேந்தல் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்கள் தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE