Thursday 25th of April 2024 03:41:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தித்  திறனை  ஆண்டிறுதிக்குள் 610 மில்லியான அதிகரிக்க  முயற்சி!

சீனாவின் கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தித் திறனை ஆண்டிறுதிக்குள் 610 மில்லியான அதிகரிக்க முயற்சி!


சாத்தியமான கோவிட்-19 தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டால் அதனை வருடாந்தம் 610 மில்லியன் என்ற அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடிய திறனை இந்த ஆண்டு இறுதிக்குள் சீனா எட்டும் என சீன அதிகாரி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சீனா மற்றும் பிற நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசிகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக உற்பத்தி திறன் அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் பீஜிங்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சீன தேசிய சுகாதார ஆணையக அதிகாரி ஜெங் ஜாங்வே தெரிவித்தார்.

ஒரு பொது தயாரிப்பு என்ற வகையில் சீனாவின் தடுப்பூசி விலை பொதுமக்கள் ஏற்கத்தக்கதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவால் அதிக ஆபத்து உள்ள பிரிவினருக்கு தடுப்பூசியை போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜெங் ஜாங்வே விருப்பம் வெளியிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE