அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றினை அடுத்து கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10 மணி முதல் திங்கட் கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை