Saturday 20th of April 2024 04:29:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
தன்மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்கிறார் நாவற்குடா ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி!

தன்மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்கிறார் நாவற்குடா ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி!


தன்மீது தனது வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் சிலரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏஎல்எம்.ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தன்மீது அடிப்படை ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில், திணைக்கள மட்டத்தில், அமைச்சு மட்டத்தில் கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பினை நடாத்தி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொலிஸ் நிலையத்திலும் உள்நோக்கோடு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதியான நியாயமான விசாரணையொன்று நடைபெற்று உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும்.

இது தொடர்பில் அறியவிரும்புவோர் என்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியும் அல்லாதுவிட்டால் வைத்தியசாலையுடன் தொடர்கொள்ளமுடியும்.

இந்த வைத்தியசாலையில் அனைத்து இன ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.அனைவரும் சந்தோசமாக கடமையாற்றுகின்றனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினைவிட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE