Wednesday 24th of April 2024 06:42:44 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2020: கொல்கத்தாவை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர்!

ஐபிஎல்-2020: கொல்கத்தாவை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர்!


ஐபிஎல்2020 ரீ-20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர் றோயல் சலஞ்சர்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 84 ஓட்டங்கனை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருந்தது.

கொல்கத்தா அணித்தலைவர் மோர்கன் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை எடுத்திருந்தார். பந்துவீச்சில் பெங்களுர் அணியின் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 85 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுhன இலக்குடன் பெங்களுர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் 25 ஓட்டங்களிலும், பிஞ்ச் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6.2 ஓவரில் 46 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வந்த குர்கீரத் சிங் மான் 21 ஓட்டங்களும், விராட் கோலி 18 ஓட்டங்களும் அடிக்க பெங்களுர் அணி 13.3 ஓவரில் 85 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE