பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவர்களிள் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது.
பிரான்ஸில் இதுவரை 10 இலட்சத்து 369 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரான்ஸில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 34,075 –ஆக உயர்ந்துள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இதேவேளை, மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் 1 மில்லியனைக் கடந்து பதிவாகியுள்ளது.
மார்ச் -11 உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயை உலகப் பெருந்தொற்றாக அறிவித்ததில் இருந்து இன்றுவரை உலகளவில் 41.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1.12 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின் பல்கலைக்கழக புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்