வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றிய 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மூவர் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் இருவருக்கான பரிசோதனை மீள மேற்கொள்ளப்படவேண்டியிருந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைய அவர்கள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா