மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு