அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு COVID-19 தோற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று காலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு 61 வயதுடைய நபர் ஒருவர் அதிக காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வந்திருந்தார் . குறித்த நபருக்கு கோவிட் 19 தோற்று இருப்பதற்கான சாத்தியம் காணப்படுவதனால் வைத்தியசாலையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளார்.
இவர் இலங்கையில் உள்ள முன்னணி தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.. மேற்படி நபர் அச்சுவேலி தோப்பு பகுதியில் தங்கி இருந்ததாகவும் இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.. குறித்த நபரை PCrபரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், அச்சுவேலி