Saturday 20th of April 2024 04:26:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

வவுனியா நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா!


வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரோனா பரிசோதனை செய்தபோது 3 பேர் அடையாளங்காணப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவர் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட சோதனையில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE