சற்று முன்னதாக 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உலகளாவிய கொரோனா தொற்று நாடுகள் வரிசையில் 117வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இலங்கை.
சற்று முன்னதாக மேலும் 263 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புபட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 7521 இல் இருந்து 7784 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் உலகளாவிய கொரோனா தொற்று உறுதியான நாடுகளின் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 117வது இடத்தை இலங்கை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை