Thursday 25th of April 2024 07:27:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
முள்ளிவளையில் மோட்டார் சைக்கிள் விபத்து! தீயில் எரிந்து இளைஞர் பலி! (2ஆம் இணைப்பு)

முள்ளிவளையில் மோட்டார் சைக்கிள் விபத்து! தீயில் எரிந்து இளைஞர் பலி! (2ஆம் இணைப்பு)


முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முள்ளிவளை - ஒட்டுசுட்டான் வீதி, ஆலடிச் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திப்பற்றி எரிவதை அவதானித்த அயலவர்களும் வீதியில் சென்றவர்களும் ஓடிச் சென்று தீயை அணைத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.

இருந்தபோதிலும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

வேறு வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தா? அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா? என்பது தெரியவரவில்லை. அதேவேளை ஆலமரத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் சிக்கிய இளைஞர் முள்ளியவளை கமநலசேவைத் திணைக்களத்துக்கு அண்மையில் வசிப்பவர் என்றும் அவர் மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றில் பணியாற்றிவருபவர் என்றும் தெரியவருகிறது.

முள்ளிவளை 02ஆம் வட்டாரம் முள்ளிவளையைச் சேர்ந்த கவிஞன் (வயது 22) என்றும் ஒரு பிள்ளையின் தந்தையான அவர் தன்னுடைய மனைவியை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பியபோதே அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE