Tuesday 19th of March 2024 05:19:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2020: சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி!

ஐபிஎல்-2020: சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி!


ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் நேற்றைய ஆட்டங்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஐபிஎல்-2020 தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களுர் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

விராட் கோலி 50 ஓட்டங்களும், டி வில்லியர்ஸ் 39 ஓட்டங்களும் எடுக்க றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை எடுத்திருந்தது.

146 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

சென்னை அணி 5.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு 6 ஓட்ங்கள், இரண்டு 4 ஓட்டங்களை விளாசி 25 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். அடுத்து டோனி களம் இறங்கினார்.

ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருத்துராஜ் கெய்க்வாட் 51 பந்தில் 65 ஓட்டங்களும், எம்எஸ் டோனி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அடுத்து நடைபெற்ற ஐபிஎல்-2020 தொடரின் 45 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் விளையாடியிருந்தன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ஏழு 6 ஓட்டங்கள், இரண்டு 4 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

196 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ் இன் அதிரடி சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது.

ஆரம்பநிலை வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேற பென் ஸ்டோக்ஸ் - சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்து வெற்றி இலக்கை எட்ட உதவினர்.

அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளை எதிர்கொண்டு பதின்நான்கு 4 ஓட்டங்கள், மூன்று 6 ஓட்ங்கள் உள்ளடங்கலாக 107 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 31 பந்துகளை எதிர்கொண்டு நான்கு 4 ஓட்டங்களையும், மூன்று 6 ஓட்டங்களுடனும் 54 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது இருந்தனர.

போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE