Thursday 28th of March 2024 07:08:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொழும்புப் பெண்ணுடன் தவறான தொடர்பிலிருந்த இளைஞர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல்!

கொழும்புப் பெண்ணுடன் தவறான தொடர்பிலிருந்த இளைஞர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல்!


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சமூகவிரோதச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பிலிருந்த இளைஞர்கள் மூவர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வந்த பெண் இளவாலை பகுதியில் சமூகவிரோதச் செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்திருக்கின்றனர்.

அதன் பின்னர் குறித்த பெண்ணுடன் தவறான தொடர்பிலிருந்த இளவாலை, சேந்தாங்குளம் பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் மூவரை பிடித்து கட்டாய தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாக இளவாலை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE