கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து அதே திசையில் சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா கண்டி பிரதான வீதியில் நகரசபை மைதானத்திற்கு திரும்பும் வீதிக்கு முன் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்தவர்களுக்குபாரிய அளவான சேதங்கள் இடம்பெறவில்லை. அரசு பேருந்தின் முன் பகுதியில் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.
வீதியின் நடுவே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற காரணத்தினால் ஏ9 பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது.
வவுனியா போக்குவரத்து பொலீசார் போக்குவரத்தை சீர் படுத்தும் அதேவேளை மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா