தமிழ்த் திரை உலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சூர்யாவின் 40வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 38வது திரைப்படமாக சூரரைப்போற்று தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில் 39வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.
'வாடிவாசல்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் 'சூர்யா-40' திரைப்படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘சூர்யா-40’ படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் இதில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து சூர்யாவின் பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளமை அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.