யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர் பகுதியில் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைப்பதாகவும் குறித்த பகுதிக்கான பஸ் சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்வது எனவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை முடக்குவதற்கான விண்ணம் மத்திய சுகாதார அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்