Friday 19th of April 2024 09:06:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜோன்சன் & ஜோன்சன் கொரோனா தடுப்பூசி  ஜனவரியில் தயாராகிவிடும் என நம்பிக்கை!

ஜோன்சன் & ஜோன்சன் கொரோனா தடுப்பூசி ஜனவரியில் தயாராகிவிடும் என நம்பிக்கை!


ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி அவசர பயன்பாட்டுக்காக 2021 - ஜனவரியில் தயாராகும் வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட ஜோன்சன் & ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையின்போது தடுப்பூசி பெற்ற தன்னார்வலர் ஒருவருக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டதால் அதன் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

எனினும் அத்தடுப்பூசியின் பரிசோதனை அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தத் தடுப்பூசியின் முதல் தொகுதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அவசர பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா-அக்லி நம்பிக்கை வெளியிட்டார்.

உலக சுகாதார உச்சி மாநாட்டில் இது குறித்து விளக்களிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE