யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வசாவிளான் மத்திய மகாவித்தியாலய வளாகத்திலிருந்து 35 கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மத்திய மகாவித்தியாலயத்திற்கு மதில் கட்டுவதற்காக நிலம் அகழப்பட்டபோதே குறித்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் படையினருக்கு அறிவிக்கப்பட்டு, படையினரின் குண்டு செயலிழக்கவைக்கும் பிரிவினரால் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரியவருகிறது.
இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்