Wednesday 24th of April 2024 11:53:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
இரண்டு வாரத்துக்குள் கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலை திறக்கப்படும்!

இரண்டு வாரத்துக்குள் கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலை திறக்கப்படும்!


யாழ்ப்பாணம் மருங்கேணி கொரோனா வைத்தியசாலையில் நோயாளர்கள் நிறைந்துள்ள நிலையில் கிளிநொச்சியில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலை இரண்டு வாரங்களுக்குள் திறக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவி இணையத்துக்குத் தெரிவித்தார்.

வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு வைத்தியசாலைகள் திறக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முதற் கட்டமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கொரோனா வைத்தியசாலை திறக்கப்பட்டது.

அங்கு ஐம்பது கட்டில்கள் போடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் திறக்க தீர்மானிக்கப்பட்ட கொரோனா வைத்தியசாலைப் பணிகள் துரிதமாக நிறைவுறுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE