ஜனாதிபதியின் ஒரு இலட்சம் தொழில் வழங்கும் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின்கீழ் மொரவெவ பிரதேசத்தில் முதலாம் கட்டத்தில் 36 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் -பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரலவினால் இன்று (27) இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கான முதல் கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இப்பயிலுனர் நியமனக் கடிதங்களை 293 பேர் முதல் கட்டத்தில் பெறுவதற்கு பெற்றுள்ளதாகவும் இதில் இன்றைய தினம் மொரவெவ பிரதேசத்தில் 36 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்னும் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டங்களில் இன்னும் பலருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மொரவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜகத் வேரகொட, உறுப்பினர்களான எஸ்.சசிகுமார், எம்.டி ரத்நாயக்க மற்றும் வை.டி.ஜெனீரதீன் என பலரும் கலந்து கொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை