கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் மீன் ஏற்றுமதி இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சுமார் 150 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்காரணமாக மீன் ஏற்றுமதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இரணைமடு குளத்தில் பிடிக்கப்படுகின்ற பெரும்பகுதி தென் பகுதிக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக மீன் ஏற்றுமதி முற்றாக தடைபட்டுள்ளது.
இதனால் இரணைமடு குளத்தின் கீழ் பிடிக்கப்படுகின்றன ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் தங்களுடைய தொழில் நடவடிக்கைகளை குறைத்து குறைந்த அளவிலேயே தற்போது மீனைப் பிடித்து உள்ளூர் வியாபாரிகளுக்கு வழங்கி வருவதாகவும் இரணைமடு நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி