இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சற்று முன்னதாக தொற்று உறுதியானவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 3 பேருக்கும், ஏற்கனவே தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களில் 291 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 8,413 இல் இருந்து 8,706 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்ட அடிப்படையில் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 232 ஆக உயர்வடைந்துள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் இன்று 110 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 647 ஆக உள்ளதுடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை