இலங்கையில் சற்று முன்னர் மேலும் 164 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக 293 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மொத்த 457 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முன்னர் அடையாளம் காணப்பட்ட 293 கொரோனா தொற்றாளர்களில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இருவரும் ஏனைய 291 தொற்றாளர்களும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்தது.
இந்நிலையில் சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்ட 164 தொற்று நேயாளர்களில் 156 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை தொற்று நோயாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள். 8 பேர் தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளின் தொற்று நோயாளர் எண்ணிக்கை 5,396 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழவதும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,870 ஆக உயர்ந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)