Thursday 25th of April 2024 10:38:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
கற்களால் மறைத்து யாழ்ப்பாணத்துக்கு மரக்குற்றிகள் கடத்தல்! பூநகரியில் சிக்கின!

கற்களால் மறைத்து யாழ்ப்பாணத்துக்கு மரக்குற்றிகள் கடத்தல்! பூநகரியில் சிக்கின!


சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட10 லட்சம் ரூபா பெறுமதியான முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்டுள்ளன. நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஜெயபுரம் காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சூட்சுமமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றியவாறு ரிப்பர் வாகனம் பயணித்த டிப்பர் வாகனம் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சிக்கியது.

குறித்த விடயம் தொடர்பில் பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்க கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த வாகனம் பொலிசாரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது மரக்குற்றிகளை கற்களால் மறைத்து சூட்சுமமான முறையில் கடத்த முற்ப்பட்டுள்ளமை தெரிய வந்தது.

குறித்த மரக்கடத்தல் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ரிப்பர் வாகனமும் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளின் பெறுமதி 10 லட்சம் மதிக்க தக்கது எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் சந்தேக நபரிற்கெதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிார் முன்னெடுத்த வருகின்றனர்.

அண்மை நாட்களாக கிளிநொச்சி, பூநகரி, வவுனியா, மன்னார் பகுதிகளில் சட்ட விரோத மரக்கடத்தல்கள் தொடர்பான விசேட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE