Tuesday 23rd of April 2024 07:42:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!


கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகிறது.

இக்கலந்துரையாடல் சற்று முன்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியது.

இதில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகியவற்றின் மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள், அதேபோன்று குறித்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, கடலுணவுகளை வடக்கு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளமையினால், கிடைக்கின்ற அறுவடைகளை விற்பனை செய்து கொள்வதில் பிரச்சiனைகள் எதிர்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஆராயும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விசேட கூட்டத்தில் பேசப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE